Disqus Shortname

காவனுார்புதுச்சேரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு

உத்தரமேரூர் ஜீலை,17
உத்தரமேரூர் தாலுக்கா காவனுார்புதுச்சேரி கிராமத்தில் நீர்வரத்து கால்வாயை  கணேசன் மகன் ஜி.செல்லப்பன் (45) என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் காவனுார்புதுச்சேரி பெரிய தாங்கல் ஏரி,சிறிய தாங்கல் ஏரி, புலியூர் ஏரி, பாப்பநல்லுார் ஏரி, ஆகிய ஏரிகளுக்கு செல்லும் கால்வாயை பொதுப்பணித்துறையினரை விரிவு பணிசெய்ய விடாமல் தடுப்பதாகவும் 400 மீட்டர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.  எனவும் 42,000 மதிப்புள்ள பணி முடங்கியுள்ளதாகவும் காவனுார்புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் காஞ்சி மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இதனால்பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று கூறுகின்றனர்.