கருவேப்பம்பூண்டி கீர்த்திமதி அன்னை 55-ம் ஆண்டு அவதார தினவிழா இன்று நடக்கிறது.
உத்தரமேரூர் ஜீலை,09
உத்தரமேரூர் தாலுக்கா கருவேப்பம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள நீரோடை மேனீரில் மங்கையின் மகிமை கீர்த்திமதி
அன்னை சக்தி பீடத்தில் இன்று திங்கட்கிழமையன்று காலை அன்னையின் 55-ம் ஆண்டு
அவதார தின விழா நடக்கிறது. காலை 4 மணிக்கு அன்னைக்கு அபிஷேக அலங்காரம், 5
மணிக்கு சக்தியின் கலச வேள்வி பூஜை, 6.30 மணிக்கு கலச அபிஷேகம், காலை 11
மணிக்கு ஓம் சக்தி பீடம் மங்கையின் மகிமை டிரஸ்ட் சார்பில் மாணவ,
மாணவியருக்கு சீருடை மற்றும் நோட்டுப்புத்தகங்களும், ஏழை எளிய மக்களுக்கு
வேட்டி, சேலை, வழங்குகிறார்கள். பகல் 12 மணிக்கு 2 ஆயிரம் நபர்களுக்கு
அறுசுவை உணவு அன்னதானம் வழங்குகிறார்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை விழா
குழுவினர் செய்து வருகின்றனர்.
No comments