Disqus Shortname

உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் இருதய இரத்தக் குழாய் அடைப்பு நீக்குதல் கருத்தரங்கம்

உத்தரமேரூர் ஜீலை,14
உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் முதல் கூட்டத்தில் இருதய இரத்தக்குழாய் அடைப்பு நீக்குதல் பற்றிய விளக்கவுரையும், குறும்படத்தில் இருதய நோய் எப்படி ஏற்படுகிறது அதை தடுக்க என்ன செய்ய வேண்டும். என்ற கருத்தரங்கம் சனிக்கிழமையன்று நடந்தது. அரிமா சங்க தலைவர் ஜி.காளிதாஸ்தலைமைதாங்கினார். சாசனத்தலைவர் டாக்டர்.சி,சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர். தே.வீராசாமி வரவேற்றார். கே.சங்கரன் அரிமா உறுதி மொழி ஏற்பும், ஆ.ஏழுமலை அரிமா வழிபாடும் வாசித்தனர். இநதிய மருத்துவ கழகத்தின் செயலாளர் டாக்டர்.பத்மநாபன், ஒய்வு பெற்ற மருத்தவ கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஆர்.கே.சேகர் கற்பக விநாயகர் மருத்துவக்கல்லுாரி மருத்துவர் டாக்டர். மனோகர் மூவரும் கலந்துகொண்டு இருதய இரத்தக்குழாய் அடைப்பு நீக்குதல் பற்றி விளக்கி பேசினார்கள் அரிமா சங்க  ஆலோசகர் இரா.கோபி பணி  ஓய்வு பெற்றமைக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் டாக்டர்கள். லயன் கே.பரமசிவம் பி.ஆனந்த், திவாகர் வாசுதேவன் உட்பட நிர்வாகிகன் பங்கேற்றனர். முடிவில் சங்க பொருளாளர் வழக்கறிஞர் எம்.மணி நன்றி கூறினார்.