Disqus Shortname

புலியூரில் 50 கறவை பசுக்கள் வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜீலை07
      உத்தரமேரூர் தாலுக்கா புலியூர் கிராமத்தில் ஞாயிறன்று 50 கறவை பசு மாடுகள் (கன்றுடன்) வழங்கும் விழா நடந்தது. புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிளமண்ட் வரவேற்றார். ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்  பாபு முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் எல்.சித்ரசேனன் உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தமிழ் முதல்வர் உத்தரவின் பேரில் விலையில்லா கறவை பசு மாடுகளை நன்கு பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றனர். கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா ஏழை குடம்பத்தை சேர்ந்த 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்கள்  வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தண்டரை தணிகைவேல் பொ.சசிக்குமார் குண்ணவாக்கம், ஆர்.கிருண்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments