Disqus Shortname

உத்தரமேரூரில் பி.எஸ்.என்.எல்.இணைய தள சேவை துண்டிப்பு

உத்தரமேரூர் ஜீலை,26 :
உத்தரமேரூரில், பி.எஸ்.என்.எல். இணைய தள சேவை, கடந்த 8 தினங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதித்தன.உத்தரமேரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். இணையதள இணைப்புகள் உள்ளன. இந்த இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிகள் பாதித்துள்ளன. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, காஞ்சிபுரம்- உத்தரமேரூர் இடையே சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளம் தோண்டும்போது முன் அறிவிப்பின்றி இணைய தள சேவைக்கான கம்பிகள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. மேலும்
இணையதள தொகுப்பறையில் குளிர்சாதன இயந்திரம் பழுதடைந்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் இணையதள சேவையில் பாதிப்பு நேரிடுகிறது. எனினும் இணையதள சேவையை விரைவில் வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.