Disqus Shortname

திருப்புலிவனம் திரிசூலக்காளியம்மன் 29-ம் ஆண்டு தீமிதி விழா

எழுத்தின் அளவு:
-

+

உத்தரமேரூர் ஜீலை,22
உத்தரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் கோவில் 29-ம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமையனறு சிறப்பாக நடந்தது. அன்னை ஸ்ரீ பரமேஸ்வரி அம்மையார் தலைமையில் 108 திருவிளக்கு பூஜை உலக நன்மைக்காக யாகவேள்வி, முடிந்தபின் கூழ்வார்த்தலும், பக்தர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார்கள். ஆன்மிகச் சொற்பொழிவு முடிந்த பின் இரவு 6,30 மணி அளவில் அன்னை பரமேஸ்வரி அம்மையாருடன் 167 பக்தர்கள் விரதமிருந்து தீமித்தனர். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் திருவீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ஜி.காளிதாஸ் அறங்காவலர்கள், ஜி,சண்முகசுந்தர் ஜி-பாலமுருகன் செய்திருந்தனர்.