Disqus Shortname

மீனாட்சி மருத்துவ கல்லுாரி மருத்துவ ஆராய்ச்சி மையமும் புதுவாழ்வு திட்ட இணைப்பில் இலவச மருத்துவ முகாம்

உத்தரமேரூர் ஜீலை,27
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையமும் புதுவாழ்வு திட்ட இணைப்பில் பல்வேறு கிராமங்களில்  இலவசமருத்துவ சிகிச்சை முகாம் நடத்திவருகின்றனர், இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமையன்று உத்தரமேரூர் ஒன்றியம் மருதம் கிராமத்தில் இலவசமருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது, இந்த மருத்துவ முகாமில் சர்க்கரைவியாதி,  இரத்தகொதிப்பு, கண்சிகிச்சை இ.சி.ஜி. சிறுநீரக பரிசோதனைகள், நரம்பு சம்பந்தமான நோய், பல் பிரச்சனை, ஆகிய அனைத்து வித பரிசோதனைகளும் அளிக்கப்பட்டது. 238 பொது மக்களும் 141 பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர், இதில் 98 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் 30 க்கு மேற்பட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்க்கு மருதம் ஊராட்சி மன்ற தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மீனாட்சியம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் எம்.ராஜா  சமூக மேம்பாட்டு திட்ட  அலுவலர் வி.ராஜேந்திரன் முன்னிலையில் புதுவாழ்வு திட்டம் மாவட்ட திட்ட மேலாளர் பி.தனசேகரன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு உதவி திட்ட மேலாளர் சுபான், கபாளீஸ்வரன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொணடனர், முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்புலிவனம் பகுதி அணித்தலைவர் ஜெ.மணிகண்டன். தலைமையிலான அணியினரும். எல்லையம்மன் மற்றும் துர்கா மகளிர் சுயஉதவிக்குழுவினரும்  சிறப்பாக செய்திருந்தனர் முடிவில் சிறப்பு குழு ஒருங்கினைப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார்,