Disqus Shortname

உத்தரமேரூரில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

உத்தரமேரூர் ஜீன்,30

உத்தரமேரூரில்  ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 25ல் பிறந்த நாள் விழாவை முன்னிட்டும்
பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டமும் சக்தி திருமண மண்டபத்தில் நடந்தது. தே.மு.தி.க உத்தரமேரூர் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான அழிசூர் வி.கன்னியப்பன் தலைமை தாங்கினார். மாநில  துணைத்தலைவர் எ.சத்தார். ஒன்றிய கழக அவைத்தலைவர் இ.வீரமணி,  பொருளாளர் எம்.சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். பேரூர் கழக செயலாளரும், 10 வது வார்டு உறுப்பினருமான ஜி.கே.வெங்கடேசன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்
தம்பி முருகன், காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.இரமேஷ் பிரபாகரன், ஆகியோர்  ஆகஸ்ட் 25 ல் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும் மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க முழு மூச்சுடன் உழைத்து 40 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உத்தரமேரூர் ஒன்றியத்தில் இன்று 1675 உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை அளிப்பதில் பெருமை அடைகிறோம். என்று சிறப்பரையாற்றினார்கள்.இவ்விழாவில் மாவட்ட பொது குழு உறுப்பினர் தெ.பழனி, மாவட்ட இளைஞர் அணி
செயலாளர் கே.பி.அருண்குமார், ஒன்றிய கழக துணைச்செயலாளர் கே.சங்கர்,
பேரூர் கழக அவைத்தலைவர் ஆர்.தென்னரசு ,பேரூர் பொருளாளர் எஸ்.எம்.வேலன்,உத்தரமேரூர் பணிமனை டி.உதயகுமார் ஆகியோர் பேசினார்கள். பேரூர் கழக இளைஞரணி செயலாளர்   எஸ்.குமார் நன்றி கூறினார்.

No comments