Disqus Shortname

அம்மா திட்ட முகாமில் மனு நீதி நாள் விழா

  உத்தரமேரூர் ஜீலை,24

உத்தரமேரூர் தாலுக்கா அரசாணிமங்கலம், ஒட்டந்தாங்கல் ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமையன்று அம்மா திட்ட முகாமில் மனு நீதி நாள் விழா ஒட்டந்தாங்கல் கிராமத்தில் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.ரேவதி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் அரசாணிமங்கலம் சுப்பிரமணியன் வரவேற்றார்.  ஊராட்சி மன்றத்தலைவர் முருகம்மாள் செல்வம் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு 3 விதவைகளுக்கும் உழவர்பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 23 நபர்களுக்கும்,முதியோர் உதவிதொகைகள் 5 நபர்களுக்கும் வழங்கும் உத்தரவை அளித்து பேசினார். இவ்விழாவில் காஞ்சி கோட்டகலால் அலுவலர் கி.தாமோதரன், உதவியாளர் சாந்தி கூறியது  இம்முகாமில் 89 மனுக்கள் பெறப்பட்டு 50 மனுக்கள் ஏற்றுக்கொள்ளபட்டது. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்று கூறினார்கள். இவ்விழாவில் ஒன்றியகுழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர்அ.ரவிசங்கர், களியாம்பூண்டி தங்க..பஞ்சாட்சரம்,  கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் திருவந்தவார் முருகன், எஸ்.சேகர், அரசாணிமங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்எம்.நாராயணன்,ஊராட்சிகிளைசெயலாளர் எ.கே.வாசுதேவன், குப்பன், உட்பட பலர் கலந்துகொண்டனர். பூந்தண்டலம் இராஜேந்திரன் நன்றி கூறினார்.