Disqus Shortname

உத்திரமேருரில் மறியலில்ஈடுபட்ட பா.ஜ., வினர் கைது:

உத்திரமேரூர்  ஜூலை 22:
சேலத்தில் பா.ஜ., மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதையொட்டி அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டத்தை முன்னிட்டு உத்திரமேரூரில்  மறியலில் ஈடுபட்ட பா.ஜ., வினர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில் பா.ஜ., மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டிப்பது, கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் பந்த் கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி  உத்திரமேரூர்   பஸ்ஸ்டாண்ட் முன்பு நடந்த மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றி வளைத்து வாகனத்தில் ஏற்றினர்.உத்திரமேரூரில்  கற்கள் வீச்சு, வன்முறை சம்பவங்கள் நடக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.