Disqus Shortname

பெருநகரில் 194 மடிகணினி வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜீலை,02
உத்தரமேரூர் தாலுக்கா பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி
மாணவ மாணவியருக்கு மடிகணினி வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் விஜயக்குமார்  தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கருணாமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் ஏ.ஆனந்தன் வரவேற்றார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் 194 மடி கணினியை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் ஒன்றிய கழக செயலாளர்கள்
வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் மானாம்பதி கண்டிகை லுாசியா ஜேம்ஸ், பி.வில்வபதி பெருநகர் எஸ்.கே.கோபால், உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments