1 கோடியே 69 லட்சத்தில் கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடப்பணி எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் ஆய்வு
உத்தரமேரூர் ஜீலை,11
உத்தரமேரூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புத்தம் புதிய கட்டிடம் கட்ட
தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.ஒரு கோடியே 69 லட்சத்து. 20 ஆயிரம் நிதி
ஒதுக்கியுள்ளார். அதன் படி 2013 ஜனவரி மாதம் பணி துவங்கப்பட்டது. பணியின்
தற்போதைய நிலை மண் வேலை முடிவுற்று சுவர் வேலை பணி துவங்குவதை உத்தரமேரூர்
சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், 10-ம் தேதி புதன்கிழமையன்று
ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பணி நிறைவு நாள் பற்றி விசாரித்தார். 2014-ம்
ஆண்டு ஏப்ரல் மாதம் பணி நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.