Disqus Shortname

களியாம்பூண்டியில் 105 மடி கணினி வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜீலை,02
உத்தரமேரூர் தாலுக்கா களியாம்பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,
மாணவியருக்கு 105 மடிகணினி வழங்கும் விழா பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை  ஆசிரியர் ஆர்.பத்மநாபன் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர்
தங்க.பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். களியாம்பூண்டி ஊராட்சி மன்றத்தலைவர் பி.வேலு முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் 105 மடிகணினிகளை வழங்கி பள்ளி மாணவ, மாணவியர் அதிக  மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றார். ஒன்றிய கழக செயலாளர்கள்  கே.பிரகாஷ்பாபு வி.ஆர்.அண்ணாமலை,கே.ஆர்.தர்மன், பி.வில்வபதி, லுாசியா ஜேம்ஸ்,  உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ஜி.கிருபாநந்தன்  நன்றி கூறினார்.

No comments