உத்தரமேரூரில் ஒன்றியத்தில் அ.தி.மு.க அரசு சாதனை விளக்க நோட்டீஸ் பிரசுரம்
உத்தரமேரூர்
ஒன்றியத்தில் அ.தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள்
பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வழங்கி பிரசாரம் காஞ்சி மாவட்ட கழக
செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத்
பா.கணேசன் திருப்புலிவனம், சாலவாக்கம், மானாம்பதி, பெருநகர்
கிராமங்களிலும், உத்தரமேரூர் பஜார் வீதியில் அம்பேத்கார் சிலையிருந்து கழக
நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினார்கள். ஒன்றிய
குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், கே.பிரகாஷ்பாபு, சாலவாக்கம் ஒனிறய குழு
உறுப்பினர் வனிதா முருகன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், தண்டரை
தணிகைவேல் அ.பி.சத்திரம் ஜி-பெருமாள் பொ.சசிக்குமார் உட்பட 300க்கும்
மேற்பட்ட கழக நிர்வாகிகள் உடன் சென்று பிரச்சாரம் செய்தனர். நடைபெற உள்ள
பாராளுமன்ற தேர்தலில் இரட்டையிலைக்கு வாக்களித்து அம்மாவை பிரதமராக்க
பிரச்சாரம் செய்தனர்,