Home
/
Uttiramerur
/
உத்திரமேரூர்
/
உத்தரமேரூர் மாரியம்மன் திருவிழா: கூழ்வார்த்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு
உத்தரமேரூர் மாரியம்மன் திருவிழா: கூழ்வார்த்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு
உத்தரமேரூர் ஜீலை,30:
உத்தரமேரூர் பஜார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். கடந்த மாதம் 21-ம் தேதி துவங்கிய இவ் விழாவையொட்டி உத்தரமேரூர் எல்லைக்குட்பட்ட 18 கிராமங்களிலும் அம்மன் திருவீதி உலா வந்தது. செவ்வாயன்று உத்தரமேரூர் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் அம்மன் திருவீதி உலா வரும் போது பக்தர்கள் வழி நெடுகிலும் திரண்டு வந்து வழிபட்டனர்.
÷வண்ணாரத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. இவ்விழாவில்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
உத்தரமேரூர் பஜார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். கடந்த மாதம் 21-ம் தேதி துவங்கிய இவ் விழாவையொட்டி உத்தரமேரூர் எல்லைக்குட்பட்ட 18 கிராமங்களிலும் அம்மன் திருவீதி உலா வந்தது. செவ்வாயன்று உத்தரமேரூர் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் அம்மன் திருவீதி உலா வரும் போது பக்தர்கள் வழி நெடுகிலும் திரண்டு வந்து வழிபட்டனர்.
÷வண்ணாரத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. இவ்விழாவில்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
உத்தரமேரூர் மாரியம்மன் திருவிழா: கூழ்வார்த்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு
Reviewed by Uhiramerur News.Com Admin
on
July 30, 2013
Rating: 5