Disqus Shortname

உத்தரமேரூர் மாரியம்மன் திருவிழா: கூழ்வார்த்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு

உத்தரமேரூர்  ஜீலை,30:


உத்தரமேரூர் பஜார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். கடந்த மாதம் 21-ம் தேதி துவங்கிய இவ் விழாவையொட்டி உத்தரமேரூர் எல்லைக்குட்பட்ட 18 கிராமங்களிலும் அம்மன் திருவீதி உலா வந்தது. செவ்வாயன்று உத்தரமேரூர் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் அம்மன் திருவீதி உலா வரும் போது பக்தர்கள் வழி நெடுகிலும் திரண்டு வந்து வழிபட்டனர்.
÷வண்ணாரத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. இவ்விழாவில்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.