Disqus Shortname

நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

உத்தரமேரூர், நவ. 30
நீச்சல் போட்டியில் தேசிய அளவில் வெண்கலம் வென்ற மாற்றுத்திறனாளி வீரரை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் மாற்றத்திறனாளிகளை முன்னேற்றும் நோக்கத்துடனும் அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளும், உதவி உபகரணங்கள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் மதுர் ஊராட்சியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் ஆனந்தன் (24) (மாற்றுதிறனாளி). நீச்சல் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது தேசிய அளவில் பெங்களுரில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் 50 மீ பிரிவில் கலந்து கொண்டு வெண்கலம் வென்றுள்ளார். இவரை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரன் பாராட்டி ஊக்குவித்தார்.

No comments