உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி
உத்தரமேரூர்
மீனாட்சி அம்மாள் குளோபல் செகண்டரி பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நேற்று
நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் எஸ்.சாந்தி
தலைமை தாங்கினார். மீனாட்சி அம்மாள் பள்ளிகளின் முதன்மைக்கல்வி அலுவலர் அருணாஅப்பாசாமி
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மீனாட்சி அம்மாள் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் ஆர்.ராஜா, நிர்வாக அலுவலர் ஆர்.பலராமன்
ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாணவர்கள் வகுப்பு வாரியாக தங்களின் படைப்புகளை பார்வையாளர்களுக்கு
விளக்கிக்கூறினர். கண்காட்சியில் மாணவர்களின் சிறப்பு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில்
பள்ளியின் துணை முதல்வர் எம்.தெய்வநாயகி நன்றி கூனார்.
No comments