Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் 779 மிக்சி,பேன்,கிரைண்டர் வழங்கும்விழா

உத்தரமேரூர் டிச,21
உத்தரமேரூர்  ஊராட்சி கிழக்கு ஒன்றியத்தில் சனிக்கிழமையன்று 779
பயனாளிகளுக்கு மின்விசிறி, மிக்சி,கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது.
திருமுக்கூடல் ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன் அ.ரவிச்சங்கர் ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். சாலவாக்கம் மண்டல துணைவட்டாட்சியர் லட்சுமி வரவேற்றார்.
திருமுக்கூடல் கிராமத்தில் 390 பயனாளிகளுக்கும் அரும்புலியூர் கிராமத்தில் 389 பயனாளிகளுக்கும் உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் காஞ்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன். மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.எம்.சடையாண்டி, அரும்புலியூர்   ஊராட்சி மன்ற தலைவர் குப்பு பெருமாள், குண்ணவாக்கம் ஆர். கிருஷ்ணமூர்த்தி, தண்டரை தணிகைவேல், விச்சூர் அம்பிகா கோவிந்தராஜ், உட்பட பலர் பங்கேற்றனர். பி.வில்வபதி நன்றி கூறினார்.

No comments