Disqus Shortname

நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

மதுராந்தகம் டிச25:
நெல்வாய் கூட்ரோடு பகுதியில், பயணிகள் நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதுராந்தகத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் வழியிலும், புக்கத்துறையில் இருந்து உத்திரமேரூர் செல்லும் மையப்பகுதியில் நெல்வாய் கூட்ரோடு பகுதி அமைந்துள்ளது.நெல்வாய், மங்களம், கரிக்கிலி, வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிமக்கள், நெல்வாய் கூட்ரோடு பகுதிக்கு வந்து பேருந்துகள் மூலம் உத்திமேரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இப்பகுதியில் நகர பேருந்து, விரைவுப் பேருந்து உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் நின்று செல்வதால், நுாற்றுக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துகின்றனர்.ஆனால், இங்கு பயணிகள் நிழற்குடை ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால், பயணிகள், மழை அல்லது வெயில் காலங்களில் ஒதுங்க இடமின்றி தவிக்கின்றனர்.
எனவே, இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

No comments