Disqus Shortname

வீட்டில் விளையாடிய 2 வயது குழந்தையை பன்றி கடித்து குதறியது

உத்திரமேரூர் டிச.14-:  

உத்திரமேரூர் அடுத்த நங்கையர் குளம் பகுதியில் வசிப்பவர் சேட்டு ( 38 ) . மனைவி அமுலு ( 34 ) . தம்பதிக்கு சக்திவேல் ( 4 ) . ராஜேஷ் ( 2 ) ஆகிய மகன்கள் உள்ளனர் . சேட்டு வீட்டில் ஏராளமான பன்றிகளை வளர்த்து வருகிறார் . இதில் ஒரு பன்றி குட்டி போட்டுள்ளது .இன்று காலை அமுலு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார் . குழந்தை ராஜேஷ் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான் . அப்போது பன்றி குட்டி அருகே சென்றுள்ளான் . குட்டியை தூக்க வருவதாக நினைத்து குழந்தையை பன்றி கடித்து குதறியது . இதில் குழந்தைக்கு தலை , கழுத்து பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது . குழந்தை அழும் சத்தம் கேட்டு அமுலு பதறியடித்து ஓடி வந்தார் . செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது . 2 வயது குழந்தையை பன்றி கடித்து குதறிய சம்பவம் உத்திரமேரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments