உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா
உத்தரமேரூர் டிச,6
உத்தரமேரூர்
பள்ளியாகரம் அமலி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் வட்ட சட்ட பணிகள்
குழுவின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா வியாழக்கிழமையன்று
நடைபெற்றது. இவ்விழாவில் காப்பக முதல்வர் கில்டாமேரி முன்னிலை வகித்தார்.
மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றி, மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.
வழக்கறிஞர்கள் ஆறுமுகம், சண்முகசுந்தரம், சந்தானம் மற்றும்
நீதி மன்ற தலைவர் எழுத்தர் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ராமலிங்கம் செய்திருந்தார்..
No comments