Disqus Shortname

ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது

உத்திரமேரூர் டிச 25:
அரசுப் பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக, இருவரை போலீசார் கைது
செய்தனர்.சென்னையில் இருந்து, போளூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்து, நேற்று முன்தினம் காலை தண்டரை கூட்டு சாலை அருகே, இருசக்கர வாகனத்தை குறுகிய இடைவெளியில் முந்தியது.இதனால், ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர், பேருந்தை வழிமறித்து, ஓட்டுனர் நாராயணமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டுநரை தாக்கிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

No comments