Disqus Shortname

கிராம நிர்வாக அலுவலர் வருவாய் கிராம ஊழியர், கிராம உதவியாளர் சங்கத்தினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

உத்தரமேரூர் டிச,17
உத்தரமேரூரில் திங்கட்கிழமையன்று தமிழ் நாடு அரசு கிராம ஊழியர் சங்கம், அரசு வருவாய் கிராம ஊழியர் சங்கம், அரசு கிராம உதவியாளர் சங்கம் ஆகிய மூன்று சங்க கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முனபு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஏ.தசரதன் தலைமை தாங்கினார். வட்டத்தலைவர் கமலக்கண்ணன், வட்ட செயலாளர், வீரராகவன் முன்னிலை வகித்தனர். கிராம உதவியாளர் கலைச்செல்வி வரவேற்றார். எஸ்.வெங்கரை கிராம உதவியாளர் கே.கேசவன் கடந்த 9 ம் தேதியன்று மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் போல் இனி வரும் காலங்களில் நடைபெறா வண்ணம் தடுக்கவும் கிராம உதவியாளர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிடவும் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி உடனடியாக வழங்கிடவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  நிர்வாகிகள் அந்தோணி, ரத்தினகுமார், தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments