வயலக்காவூரில் 348 பயனாளிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர்வழங்கும் விழா
உத்தரமேரூர்
கிழக்கு ஒன்றியம் வயலக்காவூர் கிராமத்தில் சனிக்கிழமையன்று 348
பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது.
ஊராட்சி மன்றத்தலைவர் ஸ்ரீதேவிசங்கர் தலைமை தாங்கினார். சேர்மென்
ஆர்.கமலக்கண்ணன் துணை சேர்மென் இரவிசங்கர் ஒன்றிய கழக செயலாளர்
கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சி. சாவித்திரி
வரவேற்றார். உத்தரமேரூர் தொகுதி சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் 348
பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர்களை வழங்கி தமிழக அரசின்
சாதனைகள் பற்றி சிறப்புரையாற்றினார். ஒன்றியகுழு உறுப்பினர்
டி.எம்.சடையாண்டி திருவந்தவார் முருகன், நெய்யாடுப்பாக்கம் ஊராட்சி மன்ற
தலைவர் தமிழ்மொழி, ஊராட்சி கழக செயலாளர் என்.ஏ.மணி, மாவட்ட இளைஞர் அணி
செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி படூர் விவசாய
வங்கி தலைவர் கே.செல்வகுமரன், கே.ஆர்.தருமன், ஓ.வி.வரதன். ஊராட்சி
மன்றத்தலைவர்கள் ராஜ்குமார், எஸ்.குணசேகரன். உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலாளர் பாபு ராஜேந்திரன் நன்றி கூறினார்.
No comments