Disqus Shortname

மரங்களை வெட்டும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்,நவ 03
உத்திரமேரூர் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சி மக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரனிடம் அளித்த மனு:   ஒழையூர் ஊராட்சி காட்டுபுத்தூர் ஏரிக்கரை, பெரிய ஏரிக்கரையில் வேப்ப மரம், காட்டு மரங்கள் என 250க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றாமல் ஊராட்சி தலைவர் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகிறார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரங் களை வெட்டக்கூடாது என அரசு அறிவித்தும் மரங்கள் வெட்டப்படுவது வேதனையளிக்கிறது. எனவே, ஒழையூர் ஊராட்சியில் மரங் களை வெட்டி விற்கும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

No comments