பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை பயனாளிகள் பட்டியல் ஆன்லைனில் பதிவு
உத்திரமேரூர் டிச :
பொங்கலுக்கு இலவச வேட்டி,சேலை பெறும் பயனாளிகளின் பட்டியலை ஆன் லைனில் பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும்,பொங்கல் பண்டிகையையொட்டிஏழை,எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது.ரேஷன் கடைகள் மூலம் இவை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.இதில் பல நேரங்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுவதுண்டு.முறைகேடுகளைத் தடுக்க தற்போது பயனாளிகளின் அனைத்து
தகவல்களையும் மின் ஆளுமை திட்ட பணியின் கீழ்கணினியில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்காவில் இந்தப்பணியை தொடங்க முடிவு செய்து வேலைகள் தொடங்கி உள்ளன.எனினும் விவரங்களை கணினியில் பதிவு செய்ய பெரும்பாலான கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியாததால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொங்கலுக்கு இலவச வேட்டி,சேலை பெறும் பயனாளிகளின் பட்டியலை ஆன் லைனில் பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும்,பொங்கல் பண்டிகையையொட்டிஏழை,எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது.ரேஷன் கடைகள் மூலம் இவை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.இதில் பல நேரங்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுவதுண்டு.முறைகேடுகளைத் தடுக்க தற்போது பயனாளிகளின் அனைத்து
தகவல்களையும் மின் ஆளுமை திட்ட பணியின் கீழ்கணினியில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்காவில் இந்தப்பணியை தொடங்க முடிவு செய்து வேலைகள் தொடங்கி உள்ளன.எனினும் விவரங்களை கணினியில் பதிவு செய்ய பெரும்பாலான கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியாததால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments