Disqus Shortname

திருப்புலிவனத்தில் நெல் கொள் முதல் நிலையம் திறக்க முடிவு

காஞ்சிபுரம் டிச,05:
கரீம் சம்பா நெல் சாகுபடியை அடுத்து, நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத் தில், கரீப் சம்பா பருவ சாகுபடியை, விவசாயிகள் துவக்கியுள்ளனர்.விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை, அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வசதியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், காஞ்சிபுரம் வட்டத்தில் முசரவாக்கம், குருவிமலை, உத்திரமேரூர் வட்டத்தில் திருப்புலிவனம், புலியூர் மற்றும் மதுராந்தகம் வட்டத்தில் புலிபரகோவில் ஆகிய பகுதிகளில், நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள், திறக்கப்படஉள்ளன.

No comments