Disqus Shortname

சர்வதேச தன்னார்வு தினவிழா

உத்தரமேரூர் டிச,05
உத்தரமேரூரில் வியாழக்கிழமையன்று சர்வதேச தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் சார்பில் உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகம் அருகில் தன்னார்வலர் தின விழா நடைபெற்றது. உத்தரமேரூர் துணை வட்டாட்சியர் லட்சுமி உத்தரமேரூர் காவல் துணை ஆய்வாளர் சுரேந்தர் கலந்துகொண்டு பதாகையில்  கையொப்பமிட்டு விழாவினை துவக்கிவைத்து பேசினார்கள். உத்தரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளிருந்து 100 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். புதிய தன்னார்வலர்களை இணைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைத்து தன்னார்வலர்களும் பதாகையில் கையொப்பமிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு அனைவரையும் வரவேற்றார். ஹேண்ட் இன் ஹேண்ட் திட்ட ஒருங்கிணைப்பாளர். ஆனந்த் நன்றி கூறினார். இவ்விழாவில் ஹேண்ட் இன் ஹேண்ட் உண்டு உறைவிட பள்ளி மேற்பார்வையாளர் சுந்தர், களப்பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமைப்பாதுகாப்பு குழுவைச் சார்ந்த தன்னாரவலர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டனர்.

No comments