Disqus Shortname

உத்திரமேரூரில் மந்தமாக நடைபெறும் சாலைப் பணி

உத்திரமேரூர் டிச 02:
 உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட  ராயர்தெரு, தேரடிதெரு, சோமநாதபுரம் யாதவர்தெரு, பருத்திகொல்லை முத்துமாரியம்மன்கோயில் தெரு ஆகிய 4 தெருக்களிலும் தார் சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 50 லட்சம் ஒதுக்கீ¦டு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கியது. ஆமை வேகத்தில் நடந்த பணி,  3 மாதமாகியும்  முடியவில்லை. பணிகள் மந்தமாக நடக்கிறது.
அந்த தெருக்களில் பணிக்காக சாலை தோண்டப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும்  கஷ்டப்படுகின்றனர். இது குறித்து பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் கேட்ட போது மழையின் காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். மந்தமாக நடக்கும் சாலைபணியை விரைந்து  முடிக்க  கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments