Disqus Shortname

உத்தரமேரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

உத்தரமேரூர் டிச,13
உத்தரமேரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியில் பாலர் நேசன் பள்ளி தலைமையில் ஆசிரியை கிரிஸ்டினா ஜெபமணி  முன்னிலை வகித்தார், உத்தரமேரூர் மாவட்ட  உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்ற நீதிபதி ஜெய்சங்கர், தலைமை தாங்கி பேரணியை துவக்கிவைத்தார். பேரணியை பாலர் நேசன் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளி வளாகத்தில் துவங்கி பஜார்வீதி வழியாக பதாகைகள்  ஏந்தி எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி கோஷமிட்டு உத்தரமேரூர் நீதி மன்ற வளாகத்தில் பேரணி முடிவடைந்தது. நீதி மன்ற நீதிபதி ஜெய்சங்கர் மாணவ, மாணவியர்க்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி விளக்கி கூறினார். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ராமலிங்கம் செய்திருந்தார். பேரணியில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்,

No comments