Disqus Shortname

தாய் கண்டித்ததால் 6ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு


உத்தரமேரூர், டிச.13-
உத்திரமேரூரை அடுத்த சோமநாதபுரத்தை சேர்ந்தவர் தீனதயாளன். ஓட்டலில் சப்ளையராக பணியாற்றூகிறார். இவரது மகள் நந்தினி (11).
உத்திரமேரூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்த அவர் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிக்கு போகவில்லை எனத் தெரிகிறது. அதனால் கோபமடைந்த தாய் லட்சுமி நந்தினியை கண்டித்துள்ளார்.
தாய் திட்டியதால் மனவேதனை அடைந்த மாணவி நந்தினி வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  நந்தினி உயிரிழந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments