Disqus Shortname

உத்தரமேரூர் காஞ்சி மேல்மருவத்துார் வழியாக திண்டிவனத்திற்கு பேரூந்து வசதி தேவை

உத்தரமேரூர் டிச26,  
காஞ்சிபுரத்தில் இருந்து மாகரல் ஆர்ப்பாக்கம், கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம், உத்தரமேரூர் எல்.எண்டத்துார், கீழாமூர், சென்டிவாக்கம், சோத்துப்பாக்கம்,  மேல்மருவத்துார் அச்சரப்பாக்கம், தொழுப்பேடு வழியாக  தின்டிவனத்திற்கு 85 கி.மீ துாரமுள்ள வழித்தடத்தில் நேரடி பஸ் போக்குவரத்து இதுவரை இல்லை. ஒரு மாதத்திற்கு முன் களக்காட்டூர் பகுதியில் காஞ்சீபுரம் உத்தரமேரூர் சாலையில் மாணவர்களும், பொது மக்களும் போக்குவரத்து வசதி, முறையான  இயக்கத்திற்கு சாலை மறியல் மூலம் தெரியபடுத்தி இருந்தனர். இவ்வாறு மாணவ, மாணவியர், பொதுமக்கள் இன்னல்களை  போக்கவும், மாலை நேரத்தில்  காஞ்சியில் இருநது உத்தரமேரூருக்கு செல்ல 1.30 மணி ஆகிறது- கூட்ட நெரியல் குறைப்பதந்கும் பொது மக்கள்  படும் கால விரயத்தை போக்கவும் மாலை 4.40 மணிக்கு இயங்கி வந்த தடம் எண் 89 எப் காஞ்சி திண்டிவனம் பேரூந்து மாலை 5.40 மணிக்கு காஞ்சி தின்டிவனம் 6.50 க்கு காஞ்சி திண்டிவனத்திற்கு பேரூந்து வசதி செய்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். இந்த வழித்தடங்களில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களும் 25 கல்லுாரிகளும், தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்யக்கூடிய வழித்தடங்களாகும்.  இவ்வழித்தடத்தில் பயணம் செய்வோர் போக்குவரத்து இடையூரின்றி செல்லாம். மேற்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments