Disqus Shortname

உத்திரமேரூர் அருகே வேன் விபத்தில் 9 பெண்கள் காயம்

உத்தரமேரூர் டிச,17
 உத்திரமேரூர் அருகே சாலை ஓரப் பள்ளத்தில் வேன் இறங்கியதில் 9 பெண்கள் காயம் அடைந்தனர்.
தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வளாகத்தில் தனியார் கார்மென்ட் நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர். இங்குள்ள ஊழியர்களை கம்பெனி வேன் மூலம் அழைத்து வந்து, மீண்டும் அவர்களை வீட்டில் கொண்டு விடுகின்றனர். இந்நிலையில் உத்திரமேரூர் ராவட்டநல்லூர் கிராமத்தில் இருந்து 9 பெண் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை ஒரு வேன் தாம்பரத்துக்கு புறப்பட்டது.
அது பருத்தி கொல்லை பகுதி அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் 8 பெண்கள் லேசான காயமடைந்தனர். அனிதா (25), என்பவர் படுகாயமடைந்தார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் திரண்டனர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மற்றவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு  திரும்பினர்.புகாரின்பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

No comments