Disqus Shortname

உத்தரமேரூரில் மின்சார சிக்கன சேமிப்பு விழிப்புணர்வு பேரணி, பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் டிச,19
உத்தரமேரூரில் வியாழக்கிழமையன்று மின்சாரம் சேமிப்பு விழிப்புணர்வு
பேரணி, பொதுக்கூட்டம் ஜெயா திருமண மண்டபத்தில்  நடந்தது. தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிக்கன சேமிப்பு பேரணி உத்தரமேரூர்
அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு பஜார்வீதி வழியாக மின்சார சிக்கனம்
பற்றி மின்வாரிய அலுவலர்கள் தொழிலாளர்கள் கோஷமிட்டு சென்றனர். பின்னர் நடைபெற்றகூட்டத்திற்கு உத்தரமேரூர் உதவி செயற்பொறியாளர் வரதன் வரவேற்றார். காஞ்சி தெற்கு மேற்பார்வையாளர் எஸ்.சம்பத்குமார் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு செயற்பொறியாளர் ஆர்.ஆவுடைசாமி முன்னிலை வகித்து பேசினார். மின்சார சிக்கனம் குறித்து மீனாட்சி அம்மாள் தொழில் நுட்ப கல்லுாரி  மாணவர்கள் சிறப்புரையாற்றிய என்.பார்த்திபன்
முதல்பரிசும் பி.மகேந்திரன் 2-ம் பரிசும் மாணவி பி.கீர்த்தனா முதல்
பரிசும், ஏ.சௌமியா 2-ம் பரிசும் உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ச.வெங்கடபிரவீன் முதலிடமும், ஆர்.வசந்தகுமார் ,எம்.மதன் விஜயகுமார், ரூபேஷ் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள். சென்னை மின்வாரியம் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் மின் சிக்கனம் பற்றி
சிறப்புரையாற்றினார். காஞ்சீபுரம் ஏ.கே.செல்வதுரை  நாடக மன்றத்தினர்
மின்சிக்கன நாடகம் நடத்தினார்கள். உத்தரமேரூர் இளநிலை மின்பொறியாளர்கள் செந்தில்குமார், மானாம்பதி ஓ.எஸ்.வரதன் ஆகியோர் உட்பட மின்வாரிய அலுவலர்கள், அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட 350 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். களியாம்பூண்டி இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

No comments