உத்தரமேரூரில் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சி விழா
உத்தரமேரூரில்
இந்திய சமூக கலாச்சார கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் இரண்டாம் ஆண்டுவிழா
கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. ஏ.சகிலா வரவேற்றார்.
மல்லிகாபுரம் பங்கு தந்தை ஜான் போஸ்கோ விழாவை துவக்கி வைத்தார். ஆய்வு
மையத்தின் நிர்வாக இயக்குனர் டி.எக்ஸ் நெப்போலியன் தலைமை
தாங்கினார். ஆலோசகர் என்.கவிதா, பொருளாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி,
எஸ்.ஸ்ரீலேகா, ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மையப்பநல்லுார் பங்கு
தந்தை ஏ.சார்லஸ், கிறிஸ்மஸ் நற்செய்தி பற்றி
எடுத்துரைத்தார். மல்லி ஆண்டனியின் இசைக்கச்சேரி நடந்தது. தமிழ் நாடு
பத்திகையாளர் சங்கம் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்,திரைப்பட இயக்குனர்
விவேகபாரதி, சன்.டி.வி.புகழ் ராஜா ஆகியோர் மாணவ மாணவியருக்கு பரிசுகள்
வழங்கி பாராட்டி பேசினார்கள். டி.தாமேதரன் நன்றி கூறினார், விழாவிற்கான
ஏற்பாடுகளை டி.எக்ஸ்.நெப்போலியன் சிறப்பாக செய்திருந்தார்.
No comments