Disqus Shortname

உத்திரமேரூர் அரசினர் ஆதி திராவிடர் நல விடுதி மாணவர்கள் சாலை மறியல்

உத்திரமேரூர் டிச 02
உத்திரமேரூர் அரசினர் ஆதி திராவிடர் நல விடுதியில் திங்கட்கிழமையன்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்,
உத்திரமேரூர் அடுத்து பாப்பாங்குளம் பகுதியில் அரசினர் ஆதி திராவிடர் நல மாணவர்கள் விடுதி இயங்கி வருகிறது, இந்த விடுதியில் 8 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள 75 மாணவர்கள் தங்கி பள்ளியில் பயின்று வருகின்றனர், இப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு சரிவர வழங்குவதில்லை வாரத்திற்கு 3 நாட்களுக்கு முட்டையும் மாதத்திற்கு 3 நாட்களுக்கு கறிஉணவு அளிக்கபட வேண்டும் ஆனால் வழங்கப்படுவதில்லை குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது, கழிவறை மற்றும் குளியலறையில் தணணீர் சுத்தமாக வருவதுமில்லை மின்விளக்குகள் இரவு நேரங்களில் சரிவர எரிவதில்லை  மேலும் அடிப்படை வசதியின்றி மணவர்கள் தவிக்கின்றனர், விடுதிகாப்பாளர் சுந்தரமுர்த்தி விடுதிக்கே வருவதில்லை என மாணவர்கள் குற்றம் சாற்றுகின்றனர், இரவு காவலாளி முத்து இரவு நேரங்களில் விடுதிக்கு வருவதில்லை இதனால் மாணவர்கள் இரவில் பயத்துடனே இருக்கின்றனர், இதனை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவலறிந்த உத்தரமேரூர் காவல்துறையினர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

No comments