உத்தரமேரூர்
தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் 455 பயனாளிகளுக்கும்
கருவேப்பம்பூண்டி கிராமத்தில் 394 பயனாளிகளுக்கும் விலையில்லா மின்விசிறி,
மிக்சி, கிரைண்டர்களை ஞாயிற்றுக்கிழமையன்று கால்நடை துறை அமைச்சர்
டி.கே.எம்.சின்னைய்யா வழங்கி சிறப்புரையாற்றினார். உத்தரமேரூர் தொகுதி சட்ட
மன்ற உறுப்பினரும், அ.தி.மு.க காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான
வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். திருப்பலிவனம் ஊராட்சி
மன்றத்தலைவர் பி.சரளாபிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்
கே.பிரகாஷ்பாபு வரவேற்றார். கருவேப்பம்பூண்டியில் நடைபெற்ற விழாவிற்கு
ஊராட்சி மன்ற தலைவர் கௌரிமுனுசாமி தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.வாலாஜாபாத்.பா.கணேசன்முன்னிலை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ் வரவேற்றார். 394 பயனாளிகளுக்கு விலையில்லா
பேன்,மிக்சி,கிரைண்டர்களை கால்நடை துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா
வழங்கி பாராட்டி பேசினார். இவ்விழாவில் தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன்,
ஓ.வி.வரதன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஒழையூர் ஆர்,நாராயணசாமி,
ஒன்றிய குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், திருவந்தவார்முருகன், தண்டரை
தணிகைவேல் சுப்புரெட்டி பூந்தண்டலம் இராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்
சுமதி குணசீலன் காவாம்பயிர் ஊராட்சி மன்ற தலைவர்
எஸ்.குணசேகரன், புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனி, ஒன்றிய பொருளாளர்
வி.அண்ணாதுரை, கருவேப்பம் பூண்டி சத்தியநாராயணமூர்த்தி ஒன்றியகுழு
உறுப்பினர்கள் திருப்புலிவனம் கார்வண்ணன், வாடாதவூர்
டி.எம்.சடையாண்டி,காவியந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல், அழிசூர் தலைவர் டில்லி(எ)இராதாகிருஷ்ணன், விச்சூர் அம்பிகாகோவிந்தராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருப்புலிவனம் கிளை கழக செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்
திருப்புலிவனத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா வழங்கல்
Reviewed by UTR GUYS
on
December 30, 2013
Rating: 5
No comments