Disqus Shortname

அகரம்துாளியில் இரத்ததான முகாம்.

உத்தரமேரூர் டிச,12
உத்தரமேரூர் தாலுக்கா அகரம்துாளியில் தெய்வத்திரு. எஸ்.டி.என். ஐஸ்வர்யா நினைவு இளைஞர் நற்பணி மன்றமும் சோழா அரிமா சங்கமும், இணைந்து புதன்கிழமையன்று மெகா இரத்ததான முகாம் நடந்தது. உத்தரமேரூர் சோழா அரிமா சங்க சாசனத்தலைவர் டாக்டர். சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அரிமா சங்க முன்னாள் கவர்னர் குழு தலைவர் டி.கே.கோபாலகிருஷ்ணன்  வரவேற்றார். அரிமா சங்க தலைவர் கோ.காளிதாஸ் செயலாளர் தே.வீராசாமி, பொருளாளர் எம்.மணி முன்னிலை வகித்தனர். எஸ்.டி.செழியன் சேவை நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். மாவட்டத்தலைவர்கள் ஐ.அகமத், டாக்டர் கே.பரமசிவம், தலைமையில் 62 நபர்கள் இரத்ததானம் அளித்தனர். மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நேட்டு, புத்தகங்களும் 50 முதியவர்களுக்கு ஊன்றுகோலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 மூன்று சக்கர சைக்கிளும் முன்னாள் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் சிட்டிபாபு, துக்காராம், இராமலிங்கம், பாபு, இரவி, நாயுடுகள் நல சங்க மாநிலத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் சேகர் கோபி சந்தானக்கிருஷ்ணன் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் இரண்டாயிரம் பேருக்கு காலை மற்றும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் எஸ்.டி.என். ஐஸ்வர்யா நினைவு இளைஞர் நற்பணி மன்றம் நடத்தியது,

No comments