Disqus Shortname

மர்மமான முறையில் வடமாநில இளைஞர் சாவு

உத்தரமேரூர் நவ,18
உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட அமராவதி பட்டினம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் ஸ்டீல் கம்பெனியில் பணிபுரியும் வடமாநில இளைஞர் கிருஷ்ணா (25) இவருக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் அதிகமாக உள்ளது. என்று தெரிய வந்தது. இதனால் 15 நாட்களுக்கு முன்னதாகவே இவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். இதற்கிடையே கிருஷ்ணா கம்பெனியின் பின்புறம் உள்ள வயல்வெளியில் மது அருந்திருந்தார் என்று கூறப்படுகிறது. இவர் 18 ம் தேதி புதன்கிழமையன்று காலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். என்று தகவல் வந்தது. இதை கண்ட உத்தரமேரூர் காவல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். செங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

No comments