Disqus Shortname

இன்று விவேகானந்தர் 150-வது ஜெயந்தி ரத யாத்திரை விழா

உத்தரமேரூர் டிச,11
உத்தரமேரூரில் இன்று 11ம் தேதி புதன்கிழமையன்று பகல் 3.00 மணி அளவில் மல்லியங்கரணை இராமகிருஷ்ணாமிஷன்  பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி ரத யாத்திரை விழா நடக்கிறது. பட்டாங்குளம் கிராமத்தில் பள்ளி செயலாளர் அமுர்தானந்த சுவாமிகள் தலைமையில் மாலை அணிவித்து சிலை சிறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் தே.வீராசாமி முன்னிலையில் நடக்கிறது. பருத்திக்கொல்லை அ.பி.சத்திரம் உத்தரமேரூர் நகரில் ரதயாத்திரை முடிந்தபின் மாலை 4.30 மணிக்கு உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜப்பெருமாள் கோவிலில் பரிசளிப்பு கூட்டம் நடக்கிறது. ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆ.ஏழுமலை வரவேற்கிறார்.. ராமகிருஷ்ணா மடம் தலைவர் சுவாமி ஆத்மகானந்த மஹராஜ் தலைமை தாங்குகிறார். டாக்டர். கே.பரமசிவம் எம்.எஸ்.முருகப்பா ஆகியோர் பரிசளிக்கின்றனர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மு.இளவரசி நன்றி கூறுகிறார்.

No comments