உத்தரமேரூரில் உலக மாற்று திறனாளிகள் தின விழா
உத்தரமேரூர் வட்டார வளமையம் அனைவருக்கும்
கல்வி இயக்க மையம் சார்பில் இயங்கி வரும் பகல் நேரம் பராமரிப்பு மையத்தில் உலக மாற்று
திறனாளிகள் தினவிழா செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாற்று திறனாளி மாணவ,
மாணவியர் மாறுவேடபோட்டி, நடனபோட்டிகள் நடத்தினார்கள் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன்
விழாவை துவக்கி வைத்து மாணவ, மாணவியர்க்கு பரிசுகளை வழங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர்
அ.இராஜேந்திரன் வரவேற்று பேசினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் சிறப்பு ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் 30 மாற்று திறனாளி மாணவ, மாணவியர் கலந்துக்கொண்டனர். சிறப்பு ஆசிரியர்
குமார் நன்றிகூறினார்.
No comments