உத்தரமேரூர்
தாலுக்கா மானாம்பதி அரசு ஆரம்பசுகாதார மருத்துவமனைக்கு ரூ.87 லட்சத்திற்கு
30 படுக்கைஅறை கூடுதல் கட்டிடத்திற்கு வியாழக்கிழமையன்று நடைபெற்றது.
ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை
வகித்தனர். மானாம்பதி ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் வரவேற்றார். உத்தரமேரூர்
தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு புதிய
கூடுதல்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து
கட்டுமான பணியை துவக்கி வைத்தார் இவ்விழாவில் குண்ணவாக்கம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.ஆர்.தருமன், பி.வில்வபதி, பூந்தண்டலம்
இராஜேந்திரன், ஏ.ராஜாமணி, லுாசியாஜேம்ஸ், பொதுப்பணித்துறை அலுவலர்
எம்.நாகரத்தினம், மனோகரன், வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி உட்பட பலர்
பங்கேற்றனர். மருத்துவர் டாக்டர், மைதிலி நன்றி கூறினார்.
மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 87 லட்சத்தில் கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா
Reviewed by UTR GUYS
on
December 12, 2013
Rating: 5
No comments