Disqus Shortname

செந்தமிழ் கவிஞர்கள் மன்ற முதலாம் ஆண்டு விழா

உத்தரமேரூர் டிச,29
உத்தரமேரூர் ஸ்ரீ சக்தி திருமண மண்டபத்தில் செந்தமிழ் கவிஞர்கள் மன்ற முதலாம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமையன்று  நடந்தது. மன்ற தலைவர் பி.கே.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் ஏ.நாகவல்லி, ம.பழனிவேல்ராஜன், ம.இராஜசேகரன் முன்னிலை வகித்தனர் செந்தமிழ் கவிஞர்கள் மன்ற நிறுவன செயலாளர் மருதம் ஆ.கிருஷ்ணசாமி, வரவேற்றார். 10ம், 12ம் வகுப்பு தமிழ் பாடங்களில் முதல் இடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சென்னை உலக தமிழ் ஆராச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார் முன்னாள் அரசவை கவிஞர் மற்றும் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் ந.முத்துலிங்கம் திருவள்ளுவர் படத்திற்க்கு மாலை அணிவித்து மூத்த தமிழ் ஆர்வலர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.  இவ்விழாவில் அமைப்பாளர் நா.ரா.குணசேகரன், பேராசிரியர் முனு பல்லவராசன், ஆசிரியர் லோ.வரகுணபாண்டியன்  உட்பட பலர் பங்கேற்றனர். கோ.தேவநாதசோழன் நன்றி கூறினார்.

No comments