Disqus Shortname

உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

உத்திரமேரூர் 29/02/2020
உத்திரமேரூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் நேற்று ரயில்வே  பாதுகாப்பு படை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித்துறை இயக்குனருமான சைலேந்திரபாபு  திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் நிலையத்தின் சுற்றுப்புறம் மற்றும் வாகன சோதனை மற்றும் தீயணைப்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு அழைப்புகள் குறித்து தீயணைப்பு வீர்ர்களிடத்தில்
கேட்டறிந்தார். தீயணைப்பு நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.நிகழ்வின் போது தீயணைப்பு நிலைய பணியாளர் குடியிருப்பு கட்டுவதற்காக டி.ஜி.பியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர் க.குமார், உதவி மாவட்ட அலுவலர் இரா.மு.அப்துல்பாரி, நிலைய அலுவலர் வி.மாரியப்பன் உட்பட பணியாளர்கள் உடன் இருந்தனர்.

No comments