Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பழவேறி கிராமத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

உத்திரமேரூர் 26 /01/2020
உத்திரமேரூர் அடுத்த பழவேறி கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பழவேறி  கிராமத்தில் புதியதாக கல்குவாரி துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளது. மேலும் கிராம மக்களின் ஒப்புதல் இன்றி மாவட்ட நிர்வாகம் இந்த கல்குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்த கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியினை ரத்து செய்து கல்குவாரியினை அகற்றிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் கல்குவாரியினால் பழுதான கிராம சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை
விடுத்தனர்.

No comments