உத்திரமேரூரில் இருசக்கர வானகத்தில் வந்த மாநகர போக்குவரத்து நடத்துனர் வேன் மோதி பலிஉத்திரமேரூரில் இருசக்கர வானகத்தில் வந்த மாநகர போக்குவரத்து நடத்துனர் வேன் மோதி பலி
உத்திரமேரூர் அடுத்த மேனல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன், 40 சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று(06/02/2020)
பணி முடித்துவிட்டு உத்திரமேரூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் மேனல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியிலிருந்து உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று சதுக்கம் பகுதி அருகே வந்தபோது நிலைதடுமாறி எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஞானசேகரன் மீது மோதியது. இதில் ஞானசேகரன் தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஞானசேகரன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஞானசேகரனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து உத்திரமேரூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
No comments