Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் ரேஷன் கடை திறப்பு விழா

உத்திரமேரூர் 29/01/2020
உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் தோரும் திமுக சார்பில்
குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட மக்களின்
அடிப்படை பிரச்சனைகள் தொடர்ந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் அடுத்த வாடாநல்லூர் கிராமத்தில் புதியதாக அங்கன்வாடி மையக்கட்டிடம் தேவை என கிராம மக்கள் கோரிக்கை  விடுத்திருந்தனர்.  ரிக்கையின் பேரில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.50
லட்சம் ஒதுக்கி புதிய அங்கான்வாடி மைய கட்டிடம் கட்டிட உத்தரவிட்டார். அங்கன்வாடி மைய கட்டிட பணியானது முடிவடைந்த நிலையில் கட்டிடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய  செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சேஷாத்திரி, ஜெய்சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் லதா,
செயற்குழு உறுப்பினர் நாகன், நகர செயலாளர் பாரிவள்ளல்,
கோபாலகிருஷ்ணன், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர். எம்.எல்.ஏ, மற்றும் காஞ்சி எம்.பி சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை குழந்தைகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். இதேப் போல் மல்லியங்கரணை கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments