Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ஆலோபிளாக் நிறுவன மிஷினில் சிக்கி ஒருவர் பலி

உத்திரமேரூர் 04/02/2020
உத்திரமேரூர் அடுத்த புல்லம்பாக்கம் கிராமத்தில் தனியார் ஆலோபிளாக்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்  வடமாநில இளைஞர் நிகாபிரதான் 25. இவர் ஆலோபிளாக் நிறுவனத்தில்  மிஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் ஆலோபிளாக் கல்லை பிரஸிங் மிஷினை ஆப்ரேட் செய்துள்ளார். அப்போது மஷினுல் கல்லை செலுத்தும் போது எதிர்பாராத விதமாக மிஷினில் சிக்கிக் கொண்டார். இதில் நிகாபிரதான் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சாலவாக்கம் போலீசார் நிகாபிரதான் வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments