உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனையில் கண்டன ஆர்பாட்டம்
உத்திரமேரூர் 04/02/2020
உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்த்து. ஆர்பாட்டத்தில் தொமுச து.சுந்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 14 வது பேச்சுவார்த்தை துவக்ககோரியும், 240 பணிநாள் முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடக் கோரியும், அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும், 550 கி.மீ இயக்க வரையரையை 600 கி.மீ ஆக மாற்றியதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்திரமேரூர் பணிமனை அனைத்து
தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments