Disqus Shortname

சிலாம்பாக்கம் கிராம பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்

உத்திரமேரூர் 24/02/2020
உத்திரமேரூர் ஒன்றிய தேமுதிக சார்பில் கொடிநாளையொட்டி சிலாம்பாக்கம், ஒழையூர், அனுமந்தண்டலம் மற்றும் காரணைமண்டபம்
உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் தேமுதிக ஒன்றிய செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி அருண்குமார், நிர்வாகிகள் செல்வன், தேவன் அகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு கிராமங்களில் தேமுதிக கட்சி கொடியினை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மரகன்றுகள் வழங்கி வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments